அடுத்த டார்கெட் இஸ்ரேல்! மோடியாக மாற ஆரம்பித்த எடப்பாடியார்!

11 September 2019 அரசியல்
epstour.jpg

இந்தியாவிற்கு ஒரு மோடி என்றால், தமிழகத்திற்கு எடப்பாடி எனக் கூறலாம். காரணம், தற்பொழுது மோடியின் பாதையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செயல்பட ஆரம்பித்து உள்ளார்.

எப்பொழுதுமே, தொழில் மற்றும் பொருளாதார ஒப்பந்தங்களை ஈர்ப்பதற்காகவும், முதலீட்டாளர்கள் கவர்வதற்காகவும், நமது பிரதமர் மோடி மட்டுமே, நாடு விட்டு நாடு சென்று, பொருளாதார கூட்டங்களில் கலந்து கொள்வார். முதலீட்டாளர்களிடம் உரையாடுவார். அந்தப் பாணியில் தற்பொழுது இறங்கியுள்ளார் நம் தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள்.

ஆகஸ்ட் 28ம் தேதி தன்னுடையப் பயணத்தை ஆரம்பித்த பழனிசாமி, செப்டம்பர் 10ம் தேதி தன்னுடையப் பயணத்தை முடித்துக் கொண்டு தமிழகம் திரும்பினார். கிட்டத்தட்ட 8000 கோடி ரூபாய் வரை, முதலீடுகளை ஈர்த்துள்ளதாக அவர் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். 41 நிறுவனங்களுடன் பெரிய அளவில் ஒப்பந்தகளும் கையெழுத்தாகி உள்ளன. மேலும், அடுத்து தொழில் முறைப் பயணமாக இஸ்ரேல் நாட்டிற்கு செல்லவும் திட்டமிட்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்தப் பயணங்களால், சுமார் 25,000க்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்க இயலும் எனவும் கூறுகின்றனர்.

HOT NEWS