முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ் புத்தாண்டு வாழ்த்து!

13 April 2020 அரசியல்
edappadicm1.jpg

தமிழக மக்களுக்கு, தன்னுடைய தமிழ் புத்தாண்டு வாழ்த்தினை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் புத்தாண்டு மலர்கின்ற இந்த இனிய நாளில் எனது அன்பிற்குரிய தமிழ் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் முன் தோன்றிய மூத்த குடி என்ற பாடலுக்கேற்ப தொன்மையிலும், பன்முகத் தன்மையிலும் ஈடு இணையில்லாத பண்பாட்டுப் பெருமைகளை கொண்ட தமிழ் பெருமக்கள் பண்ணெடுங்காலமாய், சித்திரைத் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகின்றார்கள்.

இந்தியாவிலேயே முதலீட்டாளர்கள் நாடுகின்ற முதன்மை மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவதோடு, பொருளாதார வளர்ச்சி, சமூக நீதி, மக்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் ஆகியவற்றில் தமிழகம் முதலிடம் பெறுவதே தனது லட்சியம் என்ற ஜெயலலிதாவின் லட்சியத்தை நனவாக்கும் வகையில் அரசு செயல்படும் தமிழக அரசு, தமிழ்நாட்டு மக்களின் நல்வாழ்விற்காக, பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தியமைக்காக, மத்திய அரசால் இந்தியாவிலேயே சிறந்த நல்லாட்சிக்கான முதன்மை மாநிலமாக தமிழ்நாடு தெரிவு செய்யப்பட்டு உள்ளது பெருமைக்குரிய ஒன்றாகும்.

இந்த புத்தாண்டில், தமிழர் தம் இல்லங்களில் நலமும் வளமும் பெருகட்டும். தமிழகம் அனைத்திலும் வெற்றி வாகை சூடட்டும். அவர்தம் வாழ்வில் இன்ப ஒளி பெருகட்டும் என்று வாழ்த்தி, தமிழ் மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என கூறியுள்ளார்.

HOT NEWS