அண்ணாச்சி பழத்தில் வெடி! கேரளாவில் கர்ப்பிணி யானை பரிதாபமாக மரணம்!

03 June 2020 அரசியல்
elephantcrackers.jpg

அண்ணாச்சிப் பழத்திற்குள் வெடியினை வைத்து, அதனை கர்ப்பிணி யானைக்கு கொடுத்துள்ள சம்பவம், அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலத்தில் யானைகள் அதிகம் உள்ளன. தற்பொழுது கேரளாவில் தென்மேற்குப் பருவமழைத் தொடங்கி உள்ளது. இந்த சூழ்நிலையில், அங்குள்ள அமைதி பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்துள்ள குளத்தில், கர்ப்பிணி யானை ஒன்று இருந்துள்ளது.

அதற்கு மர்ம நபர் ஒருவர், அண்ணாச்சிப் பழத்திற்குள் மோசமான வெடிகளை மறைத்து வைத்து உண்பதற்குக் கொடுத்துள்ளார். அதனை குளத்திற்குள் நின்று கொண்டிருந்த யானை வாயில் மென்றுள்ளது. அந்த பழத்தினை வாயில் கடித்ததும் அந்த வெடி வெடித்துள்ளது. அவ்வளவு தான், வாயில் அந்த வெடி வெடித்ததால், அந்த யானையில் வாய் கிழிந்துள்ளது.

அந்தக் குளத்திற்குள் நின்று கொண்டிருந்த அந்தக் கர்ப்பிணி யானை, நின்றபடியே மரணமடைந்துள்ளது. இந்த சம்பவம், இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலையினை ஏற்படுத்தி உள்ளது. அட்டப்பாடி என்றப் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதால், அப்பகுதியில் யார் இதனை செய்தனர் எனப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HOT NEWS