தர்மபுரி மாவட்டத்தில், குழந்தைகள் ஆபாசப் படத்தினை ஷேர் செய்தவர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார்.
இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் பொருட்டு, குழந்தைகள் ஆபாசப் படத்தினை பார்ப்பவர்களையும், ஷேர் செய்பவர்களையும் கைது செய்து வருகின்றது காவல்துறை.
இந்நிலையில், தமிழகத்தில் பல பேர் தற்பொழுது வரை, குழந்தைகள் ஆபாசப் படத்தினை பார்த்ததற்காகவும், ஷேர் செய்ததற்காகவும் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதனிடையே, தர்ம்புரியில் உள்ள ஐபி அட்ரசில் இருந்து, தொடர்ந்து குழந்தைகள் ஆபாசப் படங்கள் பார்க்கப்பட்டு வருவதாகவும், சமூக வலைதளங்களில் சேர் செய்யப்பட்டு வருவதாகவும் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு இயக்குநரகம் கூறியுள்ளது.
இதனிடையே, அந்த ஐபி அட்ரசினை போலீசார் தேட ஆரம்பித்தனர். தர்ம்புரி மாவட்டம் வெண்ணாம்பட்டி கிராமத்தினைச் சேர்ந்த, சீனு என்ற பொறியியல் மாணவர் கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் தொடர்ந்து விசாரித்தனர். அவர்கள் விசாரணையில், குழந்தைகள் ஆபாசப் படத்தினை பார்த்ததையும், ஷேர் செய்ததையும் ஒப்புக் கொண்டார். இதனைத் தொடர்ந்து, அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.