பல வருடங்களாக, கிடப்பில் போடப்பட்டுள்ள திரைப்படம் என்றால், அது என்னை நோக்கிப் பாயும் தோட்டா. சிம்புவின் வாலு படத்தினை விட, இப்படமே நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்து வந்தது.
கடந்த செப்டம்பர் 6ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியானாலும், தொடர்ந்து நிலவி வந்த பணத் தட்டுப்பாட்டால், மீண்டும் வெளியாகாமல் இருந்தது.
இப்படம் கடந்த 2016ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, பலப் பிரச்சனைகளைக் கடந்து, 2018ல் ஒரு வழியாக முடிக்கப்பட்டது. இந்நிலையில், இப்படத்தினை வேல்ஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் திரையிட உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இப்படத்தினை, வாங்கியுள்ள ஐசரி கணேஷ், வரும் நவம்பர் 29ம் தேதி அன்று இப்படத்தின் வெளியிட உள்ளதாக, அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியானது.
நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், உருவாகி இத்திரைப்படம் வெளியாக உள்ளதை அடுத்து, நடிகர் தனுஷின் ரசிகர்கள் இச்செய்தியினைக் கொண்டாடி வருகின்றனர்.