டைடல் பார்க்கிற்கு அடிகல் நாட்டினார் பழனிசாமி! 25,000 பேருக்கு வேலைவாய்ப்பு!

02 June 2020 அரசியல்
epstidalpark.jpg

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், நேற்று டைடல் பார்க்கில் புதிய வளாகம் அமைப்பதற்காக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அடிக்கல் நாட்டினார்.

நேற்று பல்வேறு மின் திட்டங்களையும் துவக்கி வைத்த அவர், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பட்டாபிராமில் 235 கோடி மதிப்புள்ள டைடல் பார்க்கினை திறப்பதற்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர், வீடியோ கான்பிரன்ஸ் மூலம் அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்த டைடல் பார்க்கின் மூலம், சுமார் 25,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றுக் கூறப்பட்டு உள்ளது. பல்வேறு வசதிகளைக் கொண்ட உயர்தரமான, கட்டிடமாக இது கட்டப்பட உள்ளது. இதன்மூலம், தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகளவில் உருவாக்கப்படும் என்றுக் கூறப்படுகின்றது.

மேலும், தென்னிந்த திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளத்தின் கீழ் உறுப்பினராக இருக்கும் தொழிலாளர்களுக்காக, சுமார் 1000 குடியிருப்புகளை செங்கல்பட்டு மாவட்டத்தின் பையனூர் பகுதியில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

HOT NEWS