அரசு முறைப் பயணமாக லண்டன் சென்றுள்ள தமிழக முல்வர் திரு எடப்பாடி பழனிசாமி, அங்கு தொழல், மருத்துவம் மற்றும் சுகாதாரம் தொடர்பான நிறுவனங்களை, பார்வையிட்டு வருகிறார்.
இந்நிலையில், நேற்று திரு பழனிசாமியின் முன்னிலையில், இரண்டு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. கொசுக்கள் மூலம் பரவும் நோய்களை முழுமையாகக் கட்டுப்படுத்துவது தொடர்பான ஒப்பந்தமும், மருத்துவர் மற்றும் செவிலியர் பணி பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான, ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளன.
இந்த ஒப்பந்தத்தின் பொழுது, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர், திரு. விஜயபாஸ்கர், தமிழக முதல்வருடன் இருந்தார். இருவரும் கோட் மற்றும் சூட் மாட்டியிருந்தனர்.