ஈரோட்டில், பொன் காளியம்மன் சிலைகளை உடைத்தவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈரோட்டின் தொப்பம்பாளையத்தில் உள்ள சிவகிரி என்ற பகுதியில், பொன் காளியம்மன் கோவில் உள்ளது. அங்கு இரு பிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக, இரவோடு இரவாக, அந்த கோவிலுக்குள் வந்த மர்ம நபர்கள், அங்கிருந்த இரண்டு அம்மன் சிலைகளை உடைத்தனர்.
இந்த காட்சிகள், அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளன. இதனையடுத்து, போலீசார் சிலைகளை உடைத்தவர்களை, தீவிரமாகத் தேடிந்தனர். தற்பொழுது, இந்த விஷயம் தொடர்பாக ஏழு பேரினை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து, டிவிட்டரில் பதிவிட்டுள்ள பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, ஈரோடு மாவட்டம் தொப்பம்பாளையத்தில் இரு தரப்புக்கு ஏற்பட்ட பிரச்சனையால், சிவகிரியில் உள்ள இரு சாமி சிலைகளை முகமூடி நபர்களால் உடைக்கப்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியது. இந்த நபர்களை கண்டறிந்து, தமிழக அரசு உடனடியாகத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.