இன்று இந்தியா முழுவதும் மிகவும் எதிர்பார்த்த, மஹாராஷ்ட்ரா மற்றும் ஹரியானா தேர்தல் இன்று முடிந்தது. இந்தியாவின் முக்கியப் பிரபலங்கள் இன்று தங்களுடைய வாக்குகளைப் பதிவு செய்தனர்.
பாலிவுட் பிரபலங்கள், ஷாரூக் கான், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் உள்ளிட்டப் பலரும் இன்றுத் தங்களுடைய வாக்குகளைப் பதிவு செய்தனர். ஒரு சில இடங்களில் சட்டவிரோதமான செயல்கள் நடைபெற்றாலும், பெரும்பாலான இடங்களில், அமைதியாகவே தேர்தல் நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில், தேர்தல் முடிந்த கையோடு, தேர்தலுக்குப் பிந்தியக் கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன. அவைகளில், கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களுமே, மஹாராஷ்ட்ரா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் பாஜக அதிக இடங்களில் வென்று, அருதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றத் தகவல்கள், வெளியாகி உள்ளன.
இந்த கருத்துக்கணிப்புகளால், தற்பொழுது பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.