தொழிற்சாலையில் தீ விபத்து! 19 பேர் பலி!

30 September 2019 அரசியல்
firefighter.jpg

சீனாவில் உள்ள, தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, சுமார் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சீனாவின் ச்சீஜீயாங் நகரில் உள்ள, நிங்காய் கவுன்டி என்ற பகுதியில் செயல்பட்டு வரும், வர்த்தகப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக, சுமார் 19 பேர் தற்பொழுது வரை பலியாகி உள்ளனர். 3 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஸ்புட்நிக் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த தீ விபத்துத் தகவல் கிடைத்ததும், தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து, தீ பரவாமல் தடுத்து நிறுத்தினர். இருப்பினும், துரதிர்ஷ்டவசமாக, அந்த தீ விபத்தினால், 19 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தீ விபத்துப் பற்றி விசாரணை நடத்தப்பட உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

HOT NEWS