முருகனுடன் பிரபல நடிகை பழக்கம்! தனிப்படை விசாரிக்க உள்ளது!

18 October 2019 அரசியல்
lalaithajewellerysuresh.jpg

திருச்சியில் உள்ள லலிதா ஜீவல்லரியில் நடைபெற்ற நகைக் கொள்ளையில் தொடர்புடையவர்களை, போலீசார் தற்பொழுது தீவிரவமாக விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், சுரேஷிடம் விசாரித்தப் போலிசாருக்குப் பல அதிர்ச்சிக் கலந்த தகவல்கள் கிடைத்துள்ளன. சுரேஷ் அளித்துள்ள வாக்குமூலத்தில், என்னை வைத்து என் மாமா முருகன் திரைப்படம் எடுக்க திட்டமிட்டார். அதற்காக, தெலுங்கில் ஆத்மா என்ற படமும் எடுக்கப்பட்டது. இருப்பினும், பணப் பிரச்சனைக் காரணமாக, படம் பாதியில் நின்றுவிட்டது. பின்னர், தமிழில் படம் எடுப்பதற்காக, திருச்சி டோல்கேட் பகுதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்தோம்.

பின், தமிழ் சினிமாவில் தற்பொழுது பிரபலமாக உள்ள நடிகையிடம் பேசுவதற்கு ஹைதராபாத் சென்றோம். அங்கு அவருடன் நானும் என் மாமா முருகனும் பேச்சுவார்த்தை நடத்தினோம். அவர் தற்பொழுது பிசியாக இருப்பதாக தெரிவித்தார். அப்பொழுது, நாங்கள் நகைக் கடை வைத்து நடத்தி வருகின்றோம் எனக் கூறினோம். அந்த நடிகை ஆச்சர்யத்துடன், அப்படியா எனக் கூறினார். அவரிடம், சில நகைகளை பரிசாக அளித்தோம் என்றுள்ளனர்.

இதனால், தற்பொழுது அந்த நடிகையிடம் தனிப் படைப் போலீசார் விசாரிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த நடிகை தமிழில் நடித்த படங்கள், பெரும் அளவில் வெற்றிப் பெறவில்லையாம்.

HOT NEWS