ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தின் முக்கிய அரசியல் தலைவரான, பரூக் அப்துல்லா தற்பொழுது விடுவிக்கப்பட்டு உள்ளார்.
சென்ற ஆண்டு, ஜம்மூ-காஷ்மீர் பகுதிக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஜம்மூ-காஷ்மீர் மாநிலத்தின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். அவர்களில், பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் மீது, பொது பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது.
இதனால், அவரால் வெளியில் நடமாட முடியவில்லை. அதற்குப் பலரும் தங்களுடைய எதிர்ப்பினை தெரிவித்து வந்தனர். மேலும், பல எதிர்கட்சித் தலைவர்கள் தங்களுடையக் கண்டக் குரல்களை எழுப்பி வருகின்றனர். ஒரு சிலர், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தும் உள்ளனர். ஜம்மூ-காஷ்மீரில் தற்பொழுது இயல்பு நிலை திரும்பியுள்ள நிலையில், தொடர்ந்து வீட்டுக் காவலில் அவர் இருந்து வந்தார்.
அவரைத் தற்பொழுது, மத்திய அரசு விடுதலை செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அவர் விடுதலையினை, அவருடையத் தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடி வருகின்றனர்.