மும்பையில் உள்ள தொழிற்சாலையில் தீ விபத்து!

08 May 2020 அரசியல்
firefighter.jpg

நேற்று மும்பையில் உள்ள தொழிற்சாலையில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

மஹாராஷ்டிராவின் மும்பை மாநகரில் உள்ள சாட்டன்புர் பகுதியில், மருந்து ஏற்றுமதி செய்யும் நிறுவனம் உள்ளது. அங்கு நேற்று இரவு, 7 மணியளவில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தானது, மளமளவென்று பெரிதாக ஆரம்பித்தது.

இதனைத் தொடர்ந்து, அந்தப் பகுதிக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயினை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பத்தும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள், இந்த முயற்சியில் ஈடுபட்டன. தற்பொழுது இந்த தீயானது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதி மக்களிடையே கடும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

HOT NEWS