காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு! ஐந்து வீரர்கள் பலி!

03 May 2020 அரசியல்
kashmirattack.jpg

காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், ஐந்து தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

வடக்கு காஷ்மீரில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக, இராணுவ அதிகாரிகளுக்கு இரகசியத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, இந்திய இராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இராணுவத்தினர், தாங்கள் இருக்கும் பகுதியினை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதைக் கண்டறிந்த தீவிரவாதிகள், இராணுவத்தினர் மீது, துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் மீது, இந்திய இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையில், கடுமையாக நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், கர்னல், இரண்டு வீரர்கள், இராணுவ அதிகாரி என ஐந்து வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தீவிரவாதிகள், இந்தத் தாக்குதலில் இருந்து தப்பித்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

HOT NEWS