நான்கு மாவோயிஸ்ட்டுகள் சுட்டுத் தள்ளப்பட்டனர்! ஒரு வீரர் வீரமரணம்!

10 May 2020 அரசியல்
armysoldiers.jpg

சட்டீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், உதவி ஆய்வாளர் வீரமரணம் அடைந்தார்.

சட்டீஸ்கரில் உள்ள ராஜ்நந்த்க்கான் மாவட்டத்தில் உள்ள பர்தோனி கிராமத்திற்கு அருகில் இருந்த காட்டிற்குள், மாவோயிஸ்ட்டுகள் பதுங்கி இருப்பதாக தகவல்கள் கிடைத்தன. இதனைத் தொடர்ந்து, மாவோயிஸ்ட்டுகளை கைது செய்வதற்காக, அப்பகுதி போலீசார் விரைந்தனர்.

அவர்கள் வருவதைப் பார்த்த மாவோயிஸ்ட்டுகள், துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். அதில், எஸ்கே சர்மா என்ற உதவி ஆய்வாளர் மரணமடைந்து உள்ளார். இதனைத் தொடர்ந்து, தற்காப்பிற்காக போலீசார் தாக்குதல் நடத்தினர். அதில், நான்கு மாவோயிஸ்ட்டுகள் மரணமடைந்தனர். இதனை, அம்மாவட்ட எஸ்பி செய்தியாளர்களுக்குத் தெரிவித்தார்.

சட்டீஸ்கரில் இன்னும் 180க்கும் அதிகமான மாவோயிஸ்ட்டுகள் இருக்கலாம் எனவும், அவர்களை விரைவில் கைது செய்வோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

HOT NEWS