நான்கு தீவிரவாதிகள் சுட்டுக் கொலை! காஷ்மீரில் இராணுவம் அதிரடி!

07 May 2020 அரசியல்
jkpolice.jpg

காஷ்மீரில் இந்திய இராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில், ஹிஸ்புல் முஜாகிதின் அமைப்பினைச் சேர்ந்த முக்கியத் தீவிரவாதிகள், நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கடந்த இரண்டு நாட்களாக, தீவிரவாதிகளுக்கும், இந்திய இராணுவத்தினருக்கும் இடையில் கடுமையான சண்டை நடைபெற்று வருகின்றது. இந்த சண்டையில், மொத்தம் எட்டு இந்திய இராணுவ வீரர்கள் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற சண்டைகளில் கொல்லப்பட்டு உள்ளனர். இதனைத் தொடர்ந்து, தற்பொழுது ஜம்மூ-காஷ்மீர் பகுதியினை, மொத்தமாக தங்களுடைய பாதுகாப்பு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, தீவிரமாக அலச ஆரம்பித்தது இந்திய இராணுவம்.

இதில், 2016ம் ஆண்டு முதல் தேடப்பட்டு வந்த, ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் முக்கியத் தீவிரவாத தளபதியான ரியாஸ் நைக்கூ, இந்திய இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதுமட்டுமின்றி, அவருடன் சேர்த்து மொத்தம் நான்கு தீவிரவாதிகளை இந்திய இராணுவத்தினர் சுட்டுத் தள்ளினர்.

தொடர்ந்து காஷ்மீர் பகுதியில், இந்திய இராணுவத்தினரும், சிஆர்பிஎப் படையினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

HOT NEWS