விடிய விடிய துப்பாக்கிச் சூடு! நான்கு தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்!

08 June 2020 அரசியல்
indiansoldiers.jpg

ஜம்மூ காஷ்மீர் பகுதியில் இன்று காலையில், விடியவிடிய நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், நான்கு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தொடர்ந்து ஜம்மூ காஷ்மீர் பகுதியில், தீவிரவாதிகள் இருப்பதை இராணுவத்தினர் கண்டுபிடித்து கைது செய்தும், சுட்டு வீழ்த்தியும் வருகின்றனர். கடந்த வாரம் ஐந்து தீவிரவாதிகளை, இந்திய இராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர். தற்பொழுது இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவி இருப்பதால், இதனைப் பயன்படுத்தி தீவிரவாதிகள் நாட்டிற்குள் ஊடுறுவி இருப்பதை இராணுவத்தினர் கண்டறிந்துள்ளனர்.

இதனை அடுத்து, ஜம்மூ காஷ்மீர் பகுதியில் ஒவ்வொரு இடமாக சல்லடையிட்டு, இராணுவத்தினர் தேடி வருகின்றனர். இந்நிலையில், பிஞ்சோரா என்ற கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதை இந்திய இராணுவத்தினர் கண்டறிந்தனர். இதனிடையே, இந்திய இராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது.

இதில், இந்திய இராணுவத்தினர் பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தினர். இந்த சண்டையானது, அதிகாலையில் இருந்து நடைபெற்று வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS