தமிழக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்ற இலவச மின்சாரத் திட்டம் தொடரும் என, தமிழக மின்வாரியத்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.
அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தினைப் பொறுத்த வரையில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கொண்டு வந்த இலவச மின்சாரத் திட்டம் தொடர வேண்டும் என்பது தான், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் திட்டமாகும். இடையில், புதிய மின் இணைப்பு பெறும் விவசாயிகளிடம் மீட்டர் பொறுத்தப்பட்டது குறித்து தமிழக முதல்வர் என்னைத் தொடர்பு கொண்டு, கேள்வி கேட்டார்.
தட்கல் முறையில் மின் இணைப்புப் பெறுபவர்களுக்கு மட்டுமே ரீடிங் எடுப்பதற்காக, இந்த மீட்டர் பொறுத்தப்பட்டு வருகின்றது என்றுக் கூறினோம். அதனையும் நீக்கும்படி அவர் கூறிவிட்டார்.
எனவே, தமிழக விவசாயிகள் யாரும் கவலைப்படவோ, பயப்படவோ, பதற்றம் அடையவோ தேவையில்லை. தமிழகத்தில் திட்டமிட்டப்படி, இலவச மின்சாரத் திட்டம் தொடர்ந்து அமலில் இருக்கும் என்றுக் கூறியுள்ளார்.