தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு, விலையில்லாத முகக் கவசம் வழங்குவதுத் தொடர்பான அரசாணையானது, தற்பொழுது வெளியாகி உள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் உள்ள இரண்டு கோடி ரேசன் அட்டைத் தாரர்களுக்கும் முகக்கவசம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து இருந்தார்.
இந்நிலையில், அதற்கான அரசாணை வெளியாகி உள்ளது. அதன்படி, 2,08,23,076 ரேஷன் அட்டைத் தாரர்களுக்கு, மீண்டும் பயன்படுத்தக் கூடிய விலையில்லாத முகக் கவசங்கள் வழங்கப்பட உள்ளன. ஒவ்வொரு நபருக்கும் இரண்டு வீதம் இந்த கவசங்கள் வழங்கப்பட உள்ளன. இதற்காக 6,74,15,899 நபர்களுக்காக மொத்தம் 13,48,31,798 மாஸ்க்குகள் கொள்முதல் செய்யப்படும் என்றுக் கூறப்பட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளில், 2,08,23,076 குடும்ப அட்டைதாரர்களுக்கு 13,48,31,798 விலையில்லா முக கவசங்கள் வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. #WearMask #TNGovt #TamilNadu pic.twitter.com/sYQtaXVeUY
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) June 10, 2020