pic credit:twitter.com/realtrump
இன்று ஜி7 மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார் நம் நாட்டின் பிரதமர். திரு. நரேந்திர மோடி. அங்கு பன்னாட்டுத் தலைவர்களையும் சந்தித்து வருகிறார்.
இன்று பிரான்ஸில் உள்ள பையாரிட்ஸ் நகரில், ஜி7 மாநாடு நடைபெற்று வருகிறது. அப்பொழுது, பத்திரிக்கையாளர்களை நம் பாரதப் பிரதமர் மோடி அவர்களும், அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்களும், சந்தித்துக் கூட்டாக பேட்டியளித்தனர்.
அப்பொழுது, மோடி இரு நாடுகளுக்கு இடையில் நல்ல உறவு நிலை நீடிக்கிறது எனத் தெரிவித்தார். அதனை ஹிந்தி மொழியில் பேசிக் கொண்டிருந்தார். தொடர்ந்து மோடி பேசும் பொழுது குறுக்கிட்ட டிரம்ப், இவருக்கு ஆங்கிலம் நன்றாகவேத் தெரியும். ஆனால், தற்பொழுது அவர் ஆங்கிலத்தில் பேச விரும்பவில்லை எனக் கூறினார்.
இதனால், சிரித்த நம் பிரதமர், டிரம்பின் கையில் ஒரு அடியும் அடித்தார். இது தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.