சட்டீஸ்கரில் விஷ வாயுக் கசிவு! ஏழு பேர் மயக்கம்!

08 May 2020 அரசியல்
chhattisgarhgasleak.jpg

சட்டீஸ்கரில் உள்ள பேப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷ வாயுக் கசிவின் காரணமாக, ஏழு பேர் மயக்கமடைந்து உள்ளனர்.

சட்டீஸ்கர் மாநிலம், ரைகார் மாவட்டத்தில் உள்ள சக்தி பேப்பர் மில்லானது, டெட்லா கிராமத்தில் அமைந்துள்ளது. மே-17 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், புதன்கிழமை அன்று இந்த பேப்பர் மில் திறக்கப்பட்டது. அப்பொழுது, அங்கிருந்த தொட்டியினைச் சுத்தம் செய்யும் மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது எதிர்பாராத விதமாக, விஷ வாயு கசிந்தது.

இதனால் அந்த பேப்பர் மில்லில் வேலை செய்த ஏழு பேர், மயக்கமடைந்து விட்டனர். அவர்களை அங்கு இருந்து மீட்ட, சக ஊழியர்கள் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து, அந்த பேப்பர் மில்லின் அதிபர் எவ்வித புகாரினையும், போலீசில் அளிக்கவில்லை. மருத்துவமனையில் மயக்கம் அடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மருத்துவர்கள் போலீசிற்கு புகார் அளித்தனர்.

அதனடிப்படையிலேயே, இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

HOT NEWS