பாகிஸ்தானில் இதய நோயால் அவதிப்பட்டு வந்த குழந்தைக்கு உதவிய, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான, கௌதம் கம்பீருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
பாகிஸ்தானைச் சேர்ந்த ஒமைமா அலி என்ற குழந்தை, தீவி இருதய நோயால் அவதிப்பட்டு வந்தார். அவர் மருத்துவ உதவிக்காக, இந்தியாவிற்கு வர விசா வேண்டி விண்ணப்பித்து இருந்தார். இந்நிலையில், அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மொகம்மத் யூசுபிடம் உதவி கோரியுள்ளார்.
இதனை, மொகம்மத் யூசுப் கௌதம் கம்பீரிடம் கூறியுள்ளார். விஷயத்தினைக் கேள்விப்பட்ட கம்பீர், உடனே, இந்திய வெளியுறவுத் துறைக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், அந்தக் குழந்தைக்கு விசா வழங்கும்படி கோரியிருக்கிறார். இதனை அறிந்த அத்துறையின் அமைச்சர் ஜெய்சங்கர், அந்தக் குழந்தைக்கு விசா வழங்க போதிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் நாட்டுடன் தற்பொழுது, சுமூக உறவு இல்லை. இருப்பினும், இந்த உதவியினைப் பெரிய அளவில் பெருமையாக பேசி வருகின்றனர், கம்பீரின் ரசிகர்கள்.