கற்பழிக்க வந்தனை தலை தெறிக்க ஓட வைத்த பெண்! காரணம் ஒரே ஒரு பொய்!

08 February 2020 அரசியல்
rape.jpg

சீனாவில் தற்பொழுது வேகமாக, கொரோனா வைரஸ் பரவி வருகின்றது. இந்த வைரஸ் காரணமாக, பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 750 பேர் பலியாகி உள்ளனர், 33,000 பேர் இந்த வைரஸ் தொற்று உள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், ஊஹான் நகருக்கு அருகில் உள்ள ஜிங்ஷான் என்ற இடத்தில், ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்த நகரில், இரவு நேரத்தில், வீட்டிற்குள் ஒரு மர்ம மனிதன் நுழைந்துள்ளான். அவன், அங்கிருந்து பெண்ணின் அறைக்குள் சென்றுள்ளான். யாரோ, அறைக்குள் நுழைந்திருப்பதைக் கண்ட பெண், கூச்சலிட்டுள்ளார்.

இதனால், அப்பெண்ணை கற்பழிக்க அந்த கொள்ளையன் முயற்சித்துள்ளான். அப்பொழுது, சுதாரித்தப் பெண், கடுமையாக இருமியுள்ளார். இதனை அவன் பார்த்துப் பயந்துவிட்டான். அந்தப் பெண், தன்னுடைய வயிற்றினைப் பிடித்துக் கொண்டு, இருமியதைப் பார்த்தக் கொள்ளையன் பயந்துவிட்டான். அப்பொழுது பேசிய அந்தப் பெண், தான் ஊஹான் நகரத்தினைச் சேர்ந்தவள் எனவும், தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது எனவும் கூறியிருக்கின்றார்.

அவ்வளவு தான். அந்த கொள்ளையன் தலைதெறிக்க ஓடிவிட்டானாம். பின்னர், அது பற்றி போலீசில் புகார் அளித்துள்ளார் அந்தப் பெண். அதனையடுத்து, நீண்டத் தேடுதலுக்கு பிறகு, 25 வயதுடைய இளைஞரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம், தற்பொழுது உலகளவில் வைரலாகி வருகின்றது.

HOT NEWS