தூக்கி வீசப்பட்ட பெண் சிசு! பெற்றத் தாயால் நேர்ந்த கொடூரம்!

06 December 2019 அரசியல்
infant.jpg

குழந்தைப் பிறந்ததும், அது பெண் என அறிந்த தாய், அதனை 17 மாடி உயரக் கட்டிடத்தில் இருந்து தூக்கி எறிந்த சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது.

மும்பையில் உள்ள அபிலேக் நகர் என்ற பகுதியில், ஜெய் பாரத் சொசைட்டிக்கு சொந்தமான பி-விங்க் கட்டிடம் உள்ளது. இதில், மதியம் சுமார் மூன்று மணியளவில், தன்னுடைய வீட்டிலேயேப் பெண் ஒருவர் குழந்தைப் பெற்றுள்ளார். பிறந்த குழந்தைப் பெண் எனத் தெரிந்ததும், ஆத்திரம் தாங்காமல் 17வது மாடியில் அமைந்துள்ள அவருடைய வீட்டின் ஜன்னலில் இருந்து, தூக்கி வீசியுள்ளார்.

அந்தக் குழந்தையானது, கீழே இருந்தே பைப்பில் கிடந்துள்ளதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், போலீசாருக்குத் தகவல் அளித்தனர். பின்னர், போலீசார் வந்து அந்தக் குழந்தையையும், அதன் தாயையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும், அந்தக் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அந்தப் பெண்ணை கொலை வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர்.

இது பற்றி போலீசார் கூறுகையில், அந்தப் பெண், தன்னுடைய மாமியார், கணவன் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். மிகவும் ஏழ்மையான சூழ்நிலையில் வாழ்ந்து வந்ததால், இந்த முடிவினை அவர் எடுத்திருக்கலாம் எனவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

HOT NEWS