தாய் தந்தையை சுட்ட தாலிபான்கள்! போட்டுத் தள்ளிய மகள்!

24 July 2020 அரசியல்
girlkillstaliban.jpg

ஆப்கானிஸ்தானில் தாய் மற்றும் தந்தையைக் கொன்ற தாலிபான்களை, அவர்களின் சொந்த மகளே துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகின்றது.

ஆப்கானிஸ்தான் நாட்டில், தாலிபான்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. அவைகளைக் கட்டுப்படுத்துவதற்காக, ஆப்கானிஸ்தான் அரசு, தன்னுடைய மக்களிடம் தாலிபான்களைக் கட்டுப்படுத்துவதற்கான ஆதரவினைக் கேட்டுள்ளது. இதற்குப் பலரும் தங்களுடைய ஆதரவினைத் தெரிவித்து வருகின்றனர். ஆனால், அவ்வாறு உதவும் நபர்களை, தாலிபான்கள் தேடிக் கண்டுபிடித்து சுட்டுக் கொல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

கோர் மாகாணம் தியோரா மாவட்டத்தினைச் சேர்ந்த கமர் குல் என்ற நபர், தாலிபான்களுக்கு எதிராக, ஆப்கான் அரசுக்கு உதவி செய்து வந்தார். இதனை அறிந்த தாலிபான்கள், அவருடைய வீட்டிற்குள் இரவு நேரத்தில் புகுந்தனர். அங்கு கமர் குல்லையும், அவருடைய மனைவியினையும் சுட்டுத் தள்ளினர்.

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய மகள், தனக்கு அருகில் இருந்த ஏகே-47 ரக துப்பாக்கியினை எடுத்து, தீவிரவாதியினை சுட்டுள்ளார். அவர் சுட்டதில், 2 தீவிரவாதிகள் இறந்துள்ளனர். மேலும், அவருடைய தம்பியும் துப்பாக்கியால் சுட்டதில் பலத் தீவிரவாதிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதற்குப் பலரும் தங்களுடைய பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இவர்களின் தியாகத்திற்கும், வீர செயலுக்கும் பாராட்டுத் தெரிவித்துள்ள ஆப்கானிஸ்தான் அரசு, அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றியுள்ளது. இச்சம்பவம், உலகளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.

HOT NEWS