தமிழகத்தில் கிளேட் ஏ13 என்ற, புதிய ரக கொரோனாவைரஸ் பரவவில்லை என, சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில், நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இந்த வைரஸ் காரணமாக, சென்னை மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், தீவிரமாக மாநகராட்சி ஊழியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், மருத்துவர்கள் எனப் பலரும் உழைத்து வருகின்றனர்.
இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பீலா ராஜஸ், தமிழகத்தில் கிளேட் ஏ13 என்ற கொரோனா வைரஸ் பரவவில்லை எனவும், அதனைப் பற்றி யாரும் கவலைப்படத் தேவையில்லை எனவும் கூறியுள்ளார். உயிரிழப்புகள் ஏதும் ஏற்படாத வண்ணம் இருக்க, புதிய வகை சிகிச்சையினை அளிப்பது குறித்து, மருத்துவர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர் எனக் கூறியுள்ளார்.
விரைவில், இந்த கொரோனா வைரஸானது கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் எனவும், பொதுமக்கள் யாரும் அச்சமடையத் தேவையில்லை எனவும் கூறியுள்ளார்.