இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மஹாராஷ்டிராவில் தங்கத்தில் முகக் கவசம் செய்து ஒருவர் முகத்தில் மாட்டியுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக, வெளியில் செல்லும் பொதுமக்கள் முகக் கவசம், கையுறைகள் உள்ளிட்டவைகளை அணிந்து செல்கின்றனர். அதே போல், இந்தியாவிலும் முகக் கவசம் அணிவது, துண்டு, கர்ச்சிப், துப்பாட்டாவினை வைத்து முகத்தினை மறைப்பது உள்ளிட்டவைகளில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ளது பிம்பிரி பகுதி. இந்தப் பகுதியினைச் சேர்ந்தவர் ஷங்கர் குராடே. மிகப் பெரிய செல்வந்தரான இவர், கடந்த வாரம், காப்பரால் ஆன, முகக் கவசம் அணிந்திருந்தார். இது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. மனிதர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. நகைகளை தயாரிப்பவருக்கு, முகக்கவசம் ஆர்டர் கொடுத்து இருந்தார். அவருடைய ஆர்டர் படி, தங்கத்தால் ஆன முகக்கவசம் செய்து கொடுத்துள்ளார் நகைகளை தயாரிப்பவர்.
தற்பொழுது அந்த முகக் கவசமானது, இரண்டு 2,90,000 ரூபாய் மதிப்புள்ள இந்தத் தங்கத்தால் ஆன முகக் கவசத்தினை அணிந்து மனிதர் பந்தாவாக வீதியில் வலம் வருகின்றார். இதனை தற்பொழுது, நெட்டிசன்கள் வைத்து செய்கின்றனர்.