pic courtesy:youtube
இங்கிலாந்தில் உள்ள உலகப் புகழ் பெற்ற, தங்கத்தால் ஆன கழிவறை திருடப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் வரலாற்றுத் தலைவர்களுள் ஒருவரான, சர். வின்ஸ்டன் சர்ச்சில் பிறந்த நகரில், இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. 1.5 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள இந்த தங்கக் கழிவறை, பார்வைக்காக வைக்கப்பட்டு சுமார் இரண்டு நாள் ஆவதற்குள் அதனை திருடி விட்டனர்.
இதனை இத்தாலியின் மௌரிஷியோ காட்டாலியன் கை வண்ணத்தில் உருவாக்கி இருந்தனர். இதனை இதற்கு நியூயார்க்கில் பொதுமக்களின் பார்வைக்காக வைத்திருந்தனர். இது பற்றிக் காவலர்கள் கூறுகையில், இதனை, குறைந்தது இரண்டு வாகனங்களில் வந்து தான் எடுத்துச் சென்றிருக்க முடியும் எனக் கருதுகின்றனர்.
இது குறித்து 66 வயது மதிக்கத்தக்க ஒருவரை, காவலர்கள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். எனினும், அவர் மீது வழக்குப் பதிவு செய்யவோ, அல்லது மேற்கொண்டு குற்றம் நிரூபிக்கப்படவோ இல்லை.
அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், எப்படியும் காலை 4.50 மணிக்கு இதனை கொண்டு சென்றிருக்கலாம் எனவும், இது குறித்த சிசிடிவிக் காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.