பாலியல் தொழிலுக்கு அங்கீகாரம் வேண்டும்! பெண் ஊழியர்கள் கோரிக்கை!

23 January 2020 அரசியல்
gender.jpg

இந்தியாவில் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு, அரசாங்கம் தகுந்த அங்கீகாரம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

நேற்று, திருச்சியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய, தென்னிந்திய எய்ட்ஸ் செயல்பாட்டு திட்ட அமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜனனி, இந்தியாவில் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர் என்றார். வீட்டு வேலை செய்பவர்கள், கட்டிட வேலை செய்பவர்கள், கூலி வேலை செய்பவர்கள் பலருக்கும் ஏற்படும் அச்சுறுத்தல் காரணமாக இந்த தொழிலில் தள்ளப்படுகின்றனர்.

பாலியல் தொழிலாளர் மீதான வன்முறை, பாலியல் தொந்தரவு குறித்த புகார்களை காவல்துறையினர் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும், பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களையும், திருநங்கைகளை அங்கீகரித்தது போல, அங்கீகரிக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

HOT NEWS