குஜராத்தில் கடும் மழை! வெள்ளக்காடான சாலைகள்!

06 July 2020 அரசியல்
gujaratrain.jpg

குஜராத்தில் பெய்த கனமழைக் காரணமாக, அம்மாநிலத்தின் சாலைகளில் மழை நீரானது, வெள்ளமாக காட்சியளிக்கின்றது.

குஜராத் பகுதிகளில் தற்பொழுது தென் மேற்குப் பருவ மழையானது தீவிரமாகப் பெய்து வருகின்றது. குஜராத் மட்டுமின்றி, உத்திரப் பிரதேசம், மஹாராஷ்டிரா, பீகார், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்த மழையானது கடுமையாகப் பெய்து வருகின்றது. இதனால், அம்மாநிலங்களில் பொதுமக்களின் இயல்வு வாழ்க்கையானது, கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக நேற்று மட்டும் குஜராத் மாநிலத்தில் 40மிமீ அதிகமாக மழை பெய்துள்ளது. அதுமட்டுமின்றி, இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக, தொடர்ந்து இடியும் மின்னலும் வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். குஜராத்தின் துவாரகா, போர்பந்தர், ராஜ்கோட், குட்ஜ், காம்பாலியா உள்ளிட்ட பகுதிகள், மழை வெள்ளத்தால் சூழ்ந்துள்ளன.

தொடர்ந்து பெய்து வருகின்ற மழையால், பொதுமக்கள் கடுமையாக அச்சம் அடைந்துள்ளனர். அவர்களை பாதுகாப்பாக மீட்கும் பொருட்டும், எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்கவும், தேசியப் பேரிடர் படையானது, தற்பொழுது குஜராத்திற்கு விரைந்துள்ளது.

HOT NEWS