குருத்தூவாரா தாக்குதல்! தீவிரவாதி கைது!

05 April 2020 அரசியல்
gurudwaraattack.jpg

கடந்த ஆண்டு, ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடையத் தீவிரவாதி கைது செய்யப்பட்டு உள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25ம் தேதி அன்று, காபூல் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 27 சீக்கியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அங்கு நடைபெற்ற வழிபாட்டில், 150 பேர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்தத் தாக்குதலுக்குக் காரணமான நபர்களை ஆப்கானிஸ்தான் அரசு தேடி வந்தது.

ஆப்கானிஸ்தான் நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைப்பான என்எஸ்சி, இந்தியாவின் என்டிடிவிக்கு பிரத்யேகமாக செய்தி அளித்துள்ளது. அதன்படி, இந்தத் தாக்குதலில் தொடர்புடைய மவ்லவி அப்துல்லா என்பவரையும், அவருக்கு உடந்தையாக இருந்த நான்கு பேரையும் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், இது பற்றிய செய்தியினை விரைவில் இந்தியாவிற்கு வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட மவ்லவி என்பவர் ஐஎஸ் அமைப்பினைச் சேர்ந்தவர் எனவும், இவருக்கும் பாகிஸ்தானில் இயங்கும் தீவிரவாத அமைப்புகளுக்கும் தொடர்பு உள்ளன எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

source:www.ndtv.com/india-news/kabul-gurudwara-attack-top-isis-man-arrested-for-attack-on-afghan-gurudwara-that-killed-27-sikhs-2206240

HOT NEWS