மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தன்னை உலகநாயகன் என கூறிக் கொண்டால் மட்டும் பத்தாது, உலக அறிவுடனும் நடந்து கொள்ள வேண்டும் என, பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா பேசியுள்ளார்.
செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கையில், ஐந்தாவது முறையாக இந்த சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் மூன்று முறை காங்கிரஸ் ஆட்சியில் இருந்த பொழுது, சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. உலகநாயகன்னு கூறினால் மட்டும் போதாது. உலக அறிவும் வேண்டும். பாராளுமன்றத்தில், அரசியல் சட்டப்பிரிவு 11 தெளிவாக விளக்குகின்றது. கமல்ஹாசனுக்கு அரசியல் சட்டமும் தெரியவில்லை. பாராளுமன்ற நடவடிக்கையும் தெரியவில்லை என பேசியுள்ளார்.