அரையாண்டுத் தேர்வு கேள்வித் தாள் வெளியானது! பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சி!

20 December 2019 அரசியல்
heloapp.jpg

பன்னிரெண்டாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு கேள்வித் தாள்கள் தற்பொழுது, சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றது.

தற்பொழுது, தமிழகம் முழுக்க உள்ளப் பள்ளிகளில் தேர்வு நடைபெற்று வருகின்றது. ஒன்பது மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வும், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை 2ம் இடைப்பருவத் தேர்வும் நடைபெற்று வருகின்றன.

இந்தத் தேர்விற்கான, தமிழக மாணவர்கள் முழுவதும் சிறப்பாகத் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் கேள்வித் தாள் வெளியாகி உள்ளது. கடந்த 18ம் தேதி அன்று, பிளஸ்-2 வேதியியல் வினாத்தாள் வெளியாகி உள்ளது. அந்தத் தேர்வு இன்று நடைபெற உள்ளது.

இந்த வினாத்தாள் வெளியானதால், தேர்வுத்துறை அதிகாரிகள் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த வினாத்தாள்கள் பெரும்பாலும், ஹலோ ஆப் மூலமாகவே லீக்காகி வருகின்றனர். மேலும், டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் இவை வெளியாகவில்லை. இது குறித்து, தற்பொழுது அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கேள்வித்தாள்களை அச்சடிக்கும் இடங்களில் இருந்து வினாத்தாள் லீக்காகி இருக்குமா எனவும் சோதித்து வருகின்றனர்.

HOT NEWS