ஹரியானா மாநிலத்தில், இன்று தேர்தல் நடைபெற்று வருகின்றது. இதில் போட்டியிடுகின்ற பாஜக வேட்பாளரின் பேச்சு தான் தற்பொழுது, வைரலாகி வருகின்றது.
அதில் அவர் பேசும் பொழுது, இந்த ஒரு நாள் நீங்கள் தவறு செய்தால் அது உங்களுடைய அடுத்த 5 ஆண்டுகளை கஷ்டமாக்கிவிடும். ஹரியானா முதல்வராக இருக்கும் மனோகர்ஜியும், மோடியும் மிகவும் உஷாரானவர்கள். யார் எந்தப் பட்டனை அழுத்தினாலும், அது பாஜகவிற்கே விழும். அதற்கு ஏற்றவாறு வாக்கு இயந்திரங்களை மாற்றி அமைத்துவிட்டோம், என பேசியுள்ளார்.
Does @ECISVEEP has anything yo say about this BJP MLA's claim about the EVM? pic.twitter.com/5NYxFLRPFk
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) October 20, 2019
இவருடையப் பேச்சுக்கு, இந்தியா முழுக்கத் தற்பொழுது பெரும் கண்டனம் எழுந்துள்ளது. இது தொடர்பாக, ஜனநாயக ஜன்டா கட்சியானது, தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.