ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் மத்தியப் பகுதிகளில், கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியன் மெட்ரோலாஜிக்கல் டிப்பார்ண்ட் (ஐஎம்டி) அமைப்பானது, இந்தியாவின் வானிலையை கண்காணித்து வருகிறது. தற்பொழுது, அது கிழக்கு ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தின் மத்தியப் பகுதி, தமிழ்நாடு, மணீப்பூர், மிசோரம், திரிபுரா, குஜராத், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உட்பட்டப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழைப் பெய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இமய மலையை ஒட்டியுள்ளப் பகுதிகளில், கனமழைப் பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.