சமூக வலைதளங்களில், ஆபாச பதிவுகள், அவதூற்றினை பரப்பும் கருத்துக்களை பதிவு செய்பவர்கள் பற்றியத் தகவலை பட்டியலிட, உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்தப் பட்டியலை தயார் செய்து, வருகின்ற 29ம் தேதி அன்று, சமர்பிக்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து, போலீசார் தற்பொழுது சமூக வலைதளங்களில், தொடர்ந்து அவதூறு பரப்பும் விதத்தில் கருத்துக்களைப் பதிவு செய்பவர்கள் மற்றும் ஆபாசப் பதிவுகளை பதிவிடுபவர்களைப் பட்டியலை, அதிதீவிரமாக தமிழக குற்றப்பிரிவு போலீசார் தாயர் செய்து வருகின்றனர்.