தமிழகத்தில் அரசு அனுமதித்துள்ள டாஸ்மாக் கடைகளை மூட, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பிற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது. அதனை, நீதிபதிகள் இன்று விசாரித்தனர். அவர்கள் விசாரணையின் பொழுது, டாஸ்மாக் கடைகளின் வீடியோக்கள், புகைப்படங்களும் சமர்பிக்கப்பட்டன. அத்துடன், சமூக இடைவெளியானது கேள்விக்குறியாகி உள்ளது எனக் கூறப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டனர். ஊரடங்கு முடியும் வரை, டாஸ்மாக் கடைகளைத் திறக்கக் கூடாது எனவும் தீர்ப்பளித்துள்ளனர். ஆன்லைன் மூலம் விற்பனை செய்வதற்கு, அனுமதியும் வழங்கியுள்ளனர். இதனால், மதுபானப் பிரியர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த உத்தரவானது, நாளை(09-05-2020) முதல் அமலுக்கு வருகின்றது.
நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையையும்,சத்தியமே வெல்லும் என்றும் நிரூபித்திருக்கிறது இந்த தீர்ப்பு.மக்களுக்கான நீதி கிடைத்திருக்கிறது.MNM மட்டும் பெற்ற வெற்றி அல்ல இது.எம் எண்ணம் வென்றது என தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி. இது தமிழ்த் தாய்மார்களின் குரலுக்கான வெற்றி #வெல்லும்தமிழகம்
— Kamal Haasan (@ikamalhaasan) May 8, 2020