டாஸ்க்மாக் கடைகளை மூட உத்தரவு! கமல் வழக்கில் வெற்றி! தலைவர்கள் வரவேற்பு!

08 May 2020 அரசியல்
tasmacopening.jpg

தமிழகத்தில் அரசு அனுமதித்துள்ள டாஸ்மாக் கடைகளை மூட, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பிற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது. அதனை, நீதிபதிகள் இன்று விசாரித்தனர். அவர்கள் விசாரணையின் பொழுது, டாஸ்மாக் கடைகளின் வீடியோக்கள், புகைப்படங்களும் சமர்பிக்கப்பட்டன. அத்துடன், சமூக இடைவெளியானது கேள்விக்குறியாகி உள்ளது எனக் கூறப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டனர். ஊரடங்கு முடியும் வரை, டாஸ்மாக் கடைகளைத் திறக்கக் கூடாது எனவும் தீர்ப்பளித்துள்ளனர். ஆன்லைன் மூலம் விற்பனை செய்வதற்கு, அனுமதியும் வழங்கியுள்ளனர். இதனால், மதுபானப் பிரியர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த உத்தரவானது, நாளை(09-05-2020) முதல் அமலுக்கு வருகின்றது.

HOT NEWS