மாணவர்கள் தாக்குதலுக்கு நாங்கள் பொறுப்பு! இந்து ரக்ஷா தளம் அறிவிப்பு!

08 January 2020 அரசியல்
hindurakshdal.jpg

டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, இந்து ரக்ஷா தளம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

டெல்லியில் உள்ள ஜேஎன்யூ பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் மீது, அடையாளம் தெரியாத நபர்கள் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தினர். இதனால், பல பேர் படுகாயம் அடைந்தனர்.

இதனையடுத்து, தாக்குதல் நடத்தியது யார் என போலீசார் விசாரிக்க ஆரம்பித்தனர். இருப்பினும், அவர்களை கண்டறிய இயலவில்லை. இந்நிலையில், ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் நடைபெற்றத் தாக்குதலை எங்கள் அமைப்பினைச் சேர்ந்தவர்கள் தான் செய்தனர் என, இந்து ரக்ஷா தள அமைப்பின் தலைவர் பிங்கி சவுத்ரி தெரிவித்தார்.

அவர் பேசும் பொழுது, இந்த ஜேஎன்யூ பல்கலைக்கழகமானது, தேச விரோத சம்பவங்களுக்கும், நடவடிக்கைகளுக்கும் கூடாரமாகி விட்டது. இதை எங்களால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. அங்கு நடைபெற்றத் தாக்குதலுக்கான முழு பொறுப்பையும் நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம். எங்கள் அமைப்பினைச் சேர்ந்தவர்கள் தான், முழு தாக்குதலையும் நடத்தியுள்ளனர் என்றார்.

இது குறித்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், பிங்கி சவுத்ரியை விசாரிக்க உள்ளனர். அவருடன் நடக்கும் விசாரணையானது, வீடியோ மூலம் கண்காணிக்கப்படவும் உள்ளது.

HOT NEWS