ஹோமியோபதியில் தற்பொழுது கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக, தகவல்கள் பரவி வருகின்றன.
இந்தியாவின் பிரதான மருத்துவ முறைகளுள் ஒன்றாக இருப்பது ஹோமியோபதி. இந்த மருத்துவ முறையில் கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக, வாட்ஸ் ஆப்பில் தகவல் பரவி வந்தன. கொரோனா வைரஸிற்கு தற்பொழுது arsenicm album 30 அர்சேனிக்கம் அல்பம் 30 என்ற மருந்தினை ஹோமியோபதி மருத்துவர்கள் பரிந்துரை செய்து வருகின்றனர். இந்த மருந்தினை வெறும் வயிற்றில் காலையில், தொடர்ந்து மூன்று நாட்கள் எடுத்துக் கொள்ளும் பொழுது கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீள இயலும் எனவும் கூறப்படுகின்றது.
தற்பொழுது வரை, இந்த மருந்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறு இருப்பினும், இன்னும் இந்திய அளவில் இதனை அதிகாரப்பூர்வ மருந்தாக அறிவிக்கவில்லை. ஆனால், வட இந்தியாவின் பலப் பகுதிகளில் இந்த மருந்தினைப் பலரும் வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர்.