இன்று டிரம்ப் வருகைக்காக, அஹமதாபாத் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. தற்பொழுது வரை, 10,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். என்ஐஏ, எஸ்பிஜி, இந்தியத் துணை இராணுவம் உள்ளிட்ட அனைத்து முக்கியப் பிரிவுகளில் இருந்தும், பாதுகாப்பிற்காக வீரர்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளனர்.
ஆளில்லா விமானம் மூலம், பாதுகாப்பு பணிகள் பார்வையிடப்படுகின்றன. இந்த சந்திப்பிற்காகவும், மோதிரா மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்காகவும், சுமார் 85 கோடி ரூபாய் அளவிற்கு செலவுகள் ஏற்பட்டுள்ளன. மலர்களால் ஆன வளைவுகள், அலங்கார விளக்குகள், இலவச தொப்பிகள், கலர் கொடிகள் என, அஹமதாபாத் திருவிழா கோலம் பூண்டுள்ளது. இதுவரை, இவ்வளவு பெரிய அளவிலான தலைவர்கள் சந்திப்பு நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.