தமிழகத்தில் வெளிமாநிலத்தவர்கள் அதிகமாக குடியேறுவதைக் கண்டித்தும், தமிழகத்தில் உள்ள அரசு வேலைகளை 90% தமிழர்களுக்கே வழங்க வேண்டி வலியுறுத்தியும், சென்னை சென்ட்ரல் நிலையத்தில் மனித சங்கிலிப் போராட்டம் நடைபெற்று வருகின்றது.
தமிழ் தேசியப் பேரியக்கம் தலைவர் மணியரசன் தலைமையில் இந்தப் போராட்டமானது, சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு வெளியே நடைபெற்று வருகின்றது. இந்தப் போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். மனித சங்கிலிப் போராட்டமும் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் பேசிய மணியரசன், தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் வேலைகளில் வெளி மாநிலத்தவர்களே அதிகம் வேலைப் பெறுகின்றனர். தமிழக இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. ஏற்கனவே, படித்த மாணவர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில், தொடர்ந்து வெளியூர் பொதுமக்கள் உள்ளூரில் வேலையில் அமர்வதால், வேலைக்காக கஷ்டப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
மஹாராஷ்டிரா, குஜராத், ஆந்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் 90% அரசு வேலைகளை உள்ளூர் மக்களுக்கு வழங்கும் வகையில் சட்டங்கள் உள்ளன. ஆனால், தமிழகத்தில் அப்படி ஒன்றும் இல்லை. இது குறித்து, தமிழக முதல்வர் பழனிசாமியிடம் விரிவாக எடுத்துரைத்தோம். ஒரு பதிலும் இல்லை.
மஹாராஷ்டிரா, குஜராத், ஆந்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் 90% அரசு வேலைகளை உள்ளூர் மக்களுக்கு வழங்கும் வகையில் சட்டங்கள் உள்ளன. ஆனால், தமிழகத்தில் அப்படி ஒன்றும் இல்லை. இது குறித்து, தமிழக முதல்வர் பழனிசாமியிடம் விரிவாக எடுத்துரைத்தோம். ஒரு பதிலும் இல்லை.
தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசு நிறுவனங்கள் அனைத்திலும் 90 விழுக்காட்டுக்கு மேலான வேலைவாய்ப்பினை மண்ணின் மக்களாகிய தமிழர்களுக்கு ஒதுக்கீடு செய்யவேண்டும்.இவ்வேலைகளுக்கு அனைத்திந்தியத் தேர்வு நடத்துவதைக் கைவிட வேண்டும்!#TamilnaduJobsForTamils#தமிழகவேலைதமிழருக்கே
— சீமான் (@SeemanOfficial) December 20, 2019
கர்நாடகம், குஜராத் போன்ற மாநிலங்களில் இருப்பது போல தமிழ்நாட்டிலும் மாநில அரசு, மத்திய அரசு, தனியார் துறை ஆகியவற்றில் தமிழ்நாட்டின் மண்ணின் மக்களுக்கு வேலை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு சட்டமியற்ற வேண்டும்!#TamilnaduJobsForTamils#தமிழகவேலைதமிழருக்கே
— சீமான் (@SeemanOfficial) December 20, 2019
தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசு நிறுவனங்கள் அனைத்திலும் 90 விழுக்காட்டுக்கு மேலான வேலைவாய்ப்பினை மண்ணின் மக்களாகிய தமிழர்களுக்கு ஒதுக்கீடு செய்யவேண்டும்.இவ்வேலைகளுக்கு அனைத்திந்தியத் தேர்வு நடத்துவதைக் கைவிட வேண்டும்!#TamilnaduJobsForTamils#தமிழகவேலைதமிழருக்கே
— நாம் தமிழர் கட்சி (@NaamTamilarOrg) December 20, 2019
கர்நாடகம், குஜராத் போன்ற மாநிலங்களில் இருப்பது போல தமிழ்நாட்டிலும் மாநில அரசு, மத்திய அரசு, தனியார் துறை ஆகியவற்றில் தமிழ்நாட்டின் மண்ணின் மக்களுக்கு வேலை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு சட்டமியற்ற வேண்டும்!#TamilnaduJobsForTamils#தமிழகவேலைதமிழருக்கே
— நாம் தமிழர் கட்சி (@NaamTamilarOrg) December 20, 2019