16 வயது பெண்ணை திருமணம் செய்தவரும் கைது! அவரிடம் இருந்து கடத்தியவரும் கைது!

02 March 2020 அரசியல்
arrestnow.jpg

கோயம்புத்தூர் மாவடத்தில், 16 வயதுப் பெண்ணை திருமணம் செய்தவரும், அவரிடம் இருந்து அந்தப் பெண்ணைக் கடத்தி சென்றவரும், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

கோம்புத்தூர் மாவட்டத்தினைச் சேர்ந்த அப்துல் சலாம் மற்றும் பர்சானா. அவர்களது மகன் முகமது நிஷார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். அவருக்கும், 16 வயது சிறுமிக்கும் இடையில் திருமணம் நடைபெற்றது.

இதனிடையில், புதுமணத் தம்பதிகள் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதனிடையே, அந்தப் புதுமணப் பெண் காணாமல் போனார். பதறிப் போன நிஷார் வீட்டார், காவல்துறையில் புகார் அளித்தனர். புகார் அளிக்கையில், மனைவியினைப் பற்றியத் தகவல்களை அளிக்கும் பொழுது, அவருடைய வயது 16 எனக் கொடுத்தனர். இதனால், 18 வயதிற்கு கீழ் உள்ளப் பெண்ணைத் திருமணம் செய்ததற்காக, முகமது நிஷாரையும், அவருடையப் பெற்றோரையும் போக்சோ சட்டதின் கீழ், போலீசார் கைது செய்தனர்.

காணாமல் போன பெண்ணை தேடும் பணியில், போலீசார் முழுவீச்சில் ஈடுபட்டனர். அப்பொழுது அந்தப் பெண்ணை, ரஞ்சித் குமார் என்பவர் கடத்தி இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ரஞ்சித் குமாரினைப் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம், தற்பொழுது பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

HOT NEWS