pic credit:twitter.com/@ani
எம்க்யூஎம் (Muttahida Quami Movement) என்ற இயக்கத்தைச் சேர்ந்தவரும், அதன் தலைவருமான அல்தாப் ஹூசைன், இந்தியாவின் தேசியப் பெருமையைப் போற்றும் பாடலான, சாரே சாஹன்சே அச்சா என்றப் பாடலைப் பாடியுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானே ஒரு பக்கம் காஷ்மீர் விஷயத்தில், நெருப்பை வயிற்றில் கட்டிக் கொண்டு இருக்கிறது. அடுத்து இந்தியா என்ன செய்யும் என்ற நிலையில் அனைவரும் பீதியில் உள்ளனர். ஒரு பக்கம், எப்படி இந்தியாவினைப் பழிவாங்க முடியும் என்ற யோசனையில் உள்ளனர். இந்நிலையில், எம்க்யூஎம் தலைவர் ஹூசைன் இப்படி இந்தியப் பாடலை பாடியுள்ளார்.
இந்நிலையில், ஹூசைனை இங்கிலாந்தில் உள்ள லண்டனில், கைது செய்தப் போலீசார், அவரை விசாரித்து வருகின்றனர்.