கரூர் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான ஜோதிமணியினை, பாஜகவின் உறுப்பினர் கரு.நாகராஜன் தரக்குறைவாகப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று முன்தினம் இரவு நியூஸ்7 தமிழ் சேனலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புலம்பெயர் தொழிலாளர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு கைகொடுக்க மறுக்கின்றவா எதிர்க்கட்சிகள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. அதில், திமுகவின் கலாநிதி வீராசாமி, காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி, பாஜகவின் கரு.நாகராஜன் கலந்து கொண்டனர். விவாதம் நன்றாக சென்று கொண்டிருந்த சமயத்தில், பாஜகவின் கரு. நாகராஜன் தரக்குறைவான வார்த்தைகளினால் ஜோதிமணியினை ஒருமையில் பேச ஆரம்பித்தார்.
இதனால் கடுப்பான ஜோதிமணி, நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இதற்குப் பலரும் தங்களுடைய எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். ஒரு பெண்ணை எவ்வாறு இப்படி பேசப் போகலாம் என்றுக் கூறி, பலரும் கரு.நாகராஜனுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், கரு.நாகராஜன் பேசியது சரிதான் எனப் பாஜகவினர் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இவைகளுக்கு எல்லாம் மேலாக, #I_Stand_with_Jothimani என்ற ஹேஸ்டேக்கில் ஜோதிமணிக்கு ஆதரவாக பலரும் தங்களுடைய கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
Only a person with a filthy mind can speak like this about a woman MP. The anchor should have taken him off air immediately, but allowed Karu Nagarajan to rant. Let's see what action @Murugan_TNBJP takes on Karu Nagarajan. pic.twitter.com/TEh85PJJzb
— Savukku_Shankar (@savukku) May 18, 2020