பிரதமர் அலுவலகத்திற்கு தேர்வு செய்யப்பட்டு உள்ள, ஐஏஎஸ் அமுதாவிற்கு தமிழக அரசியல் தலைவர்கள் பாராட்டுத் தெரிவித்து உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தின் கலெக்டராக பணிபுரிந்து வந்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா, தற்பொழுது பிரதமர் அலுவலகத்தின் இணை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து வெளியிட்டுள்ள தகவலில், தனது நேர்மையாலும், திறமையாலும், அரசின் நன்மதிப்பையும், மக்களின் அன்பையும் பெற்ற, தமிழ்நாட்டினைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா, பிரதமர் அலுவகத்தின் இணை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளது மகிழ்ச்சி அளிக்கின்றது என்று கூறியுள்ளார்.