பிரபல ஐஏஎஸ் அதிகாரி பணியிட மாற்றம்!

16 November 2019 அரசியல்
iasrohini.jpg

சேலம் மாவட்டத்தின் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரியாக செயல்பட்ட, ரோஹிணி ஐஏஎஸ் தற்பொழுது மத்திய அரசின் பணிக்கு அதிரடியாக மாற்றப்பட்டு உள்ளார்.

2017ம் ஆண்டில் சேலம் மாவடத்தின் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரியாக, ரோஹிணி பதவியேற்றார். தொடர்ந்து, பல அதிரடி செயல்களில் ஈடுபட்டதால், அவர் உடனடியாகப் பிரபலம் அடைந்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் பொழுது, தேர்தல் அதிகாரியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். தொடர்ந்து, சிறப்பாக செயல்பட்டு வந்த ரோஹிணியை, தமிழ்நாடு இசை கலைக் கல்லூரியின் பதிவாளராக, தமிழக அரசு பணியிட மாற்றம் செய்தது.

இந்நிலையில், தற்பொழுது அவர் மீண்டும் மத்திய அரசின் பணிக்கு மாற்றப்பட்டு உள்ளார். அவர், தற்பொழுது, மத்திய அரசின் உயர்கல்வித்துறை துணைச் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

HOT NEWS