இளையராஜாவினைத் தெரியாதவர்கள் கிடையாது. அனைவருடைய, சோகத்தினையும் மறக்க வைத்து, மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும் மகா இசைக்கலைஞன். இசைஞானி என அனஐவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவர். மொத்தமாக 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து, மாபெரும் சாதனைப் படைத்தவர்.
இவ்வளவு பெருமைகளுக்குச் சொந்தக்காரரான இளையராஜாவுக்கும், அவர் பணிபுரிந்த ஸ்டுடியோவிற்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டது. அவருடைய ரெக்கார்டிங் ஸ்டுடியோவானது, பிரசாத் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் இடத்தில் அமைந்துள்ளது. இதனையடுத்து, அங்கு செல்ல இளையராஜாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அந்த இடத்திற்கு எவ்வளவு வேண்டும் என்றாலும், வாடகைத் தருவதாக ராஜா தெரிவித்தும் பிரசாத் ஸ்டுடியோஸ் அனுமதிக்கவில்லை.
இதனையடுத்து, இளையராஜாவினை அனுமதிக்கக் கோரி, இயக்குநர் பாரதிராஜா, சீமான் உள்ளிட்டோர் பிரசாத் ஸ்டுடியோஸ் நிறுவனத்தினை முற்றுகையிட்டும் பார்த்தனர். ஒரு பலனும் ஏற்படவில்லை. இதனையடுத்து, தற்ப்பொழுது தமிழரசன் படத்திற்கு இசையமைக்கும் பணியானது, இளையராஜாவிடம் உள்ளது.
படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து விட்ட நிலையில், இசையமைக்கும் பணிகள் பாக்கி இருப்பதை அடுத்து, படத்திற்கான இசையமைக்கும் பணிகளை, தன்னுடைய வீட்டில் இருந்தே ராஜா செய்ய ஆரம்பித்துவிட்டார். வீட்டில், தற்காலிகமாக ரெக்கார்டிங் ஸ்டுடியோவினை உருவாக்கி அங்கு இசையமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றார் என, கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.