இந்தியாவுடன் பேச்சுவார்த்தை கிடையாது! இம்ரான் கான் திட்டவட்டம்!

19 September 2019 அரசியல்
imrankhan.jpg

செப்டம்பர் 27ம் தேதி அன்று, உங்கா மாநாட்டில் பங்குபெற்று பேச உள்ளார் பாகிஸ்தான் பிரதமர் திரு.இம்ரான் கான். அன்று நம் நாட்டுப் பிரதமரும், அந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேச உள்ளார். இதனை முன்னிட்டு, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த இம்ரான் கான், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை இனி கிடையாது எனக் கூறினார்.

அவர் கூறுகையில், ஜம்மூ மற்றும் காஷ்மீர் பகுதியில் உள்ள இந்த சிக்கல்களை, இந்தியா நீக்க வேண்டும். அதுவரை அந்நாட்டுடன் எவ்வித, பேச்சுவார்த்தையும் கிடையாது எனக் கூறினார். மேலும், பிரதமர் மோடி உட்பட எவ்வித இந்திய விமானத்தையும், பாகிஸ்தான் மீது பறக்கவிடாமல் தடையும் விதித்துவிட்டார்.

பிரதமர் மோடி, உங்கா மாநாட்டிற்குச் செல்ல உள்ளார். அதற்கான, வான்வழித் தடத்திற்கு பாகிஸ்தான் தடை விதித்துள்ளது. அது மட்டுமின்றி, ஏற்கனவே, இந்தியக் குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் விமானம் பறக்கவும் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS