இந்தியா மீது போர்! இம்ரான் கான் அதிரடி பேச்சு!

26 September 2019 அரசியல்
imrankhanspeechlatest.jpg

காஷ்மீர் பிரச்சனைக்காக, இந்தியா பாகிஸ்தான் இடையே போர் வரலாம் என, இம்ரான் கான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காஷ்மீர் விவகாரம் தொடர்ந்து கவலை அளிப்பதாக, அவர் கூறியுள்ளார். சுமார் 9,00,000 லட்சம் போர் வீரர்களுக்கு மத்தியில், காஷ்மீர் மக்கள் வெட்ட வெளி சிறையில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் இவ்வளவு போர் வீரர்களுக்கு மத்தியில், கல்வி மற்றும் மருத்துவ வசதியின்றி வாழ்ந்து வருவதாகவும் கூறியுள்ளார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகியவை, இங்கிலாந்திடம் இருந்து, பிரிந்து சுதந்திர நாடாக மாறிய பிறகு, தொடர்ந்து எதிரியாகவே இருந்து வருகிறது. இரண்டு நாடுகளிடமும், அணு ஆயுதங்கள் இருக்கின்றன. இந்தப் பிரச்சனை எங்கு சென்று முடியும் என்று, எனக்குத் தெரியாது.

போர் வந்தால் என்ன நடக்கும் எனத் தெரியாது. ஆனால், அது அனைவருக்குமேப் பிரச்சனை தான். இஸ்லாமிக் டெரரிஸம் எனக் கூறி, தீவிரவாதிகளைக் கூறுகின்றனர். ஆனால், அந்த இஸ்லாமிக் டெரரிஸம் என்ற வார்த்தையைக் கூறி, மனித உரிமைகள் உட்பட, அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன எனவும் கூறியுள்ளார்.

HOT NEWS