சர்வதேச கூட்டங்கள் நடக்கும் இடங்களுக்கெல்லாம், காஷ்மீர் பிரச்சனையைக் கொண்டு செல்வேன், காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பேன் என, பாகிஸ்தான் பிரதமர் திரு. இம்ரான் கான் உறுதி கொண்டு இருந்தார். தற்பொழுது அவரே, வாய்விட்டு புலம்பி விட்டார்.
அவர் பேசுகையில், நான் இந்த சர்வேதசக் கூட்டத்தாலும், கூட்டமைப்பாலும் சற்று வருத்தத்துடன் இருக்கின்றேன். இந்தியாவினை ஒரு பில்லியன் கொண்ட மார்க்கெட்டாக, மற்ற நாடுகள் பார்க்கின்றன. இதனால், அவர்களுக்கு ஆதரவு அளிக்கின்றனர்.
இதனை அவர்கள் வெளிப்படையாக சொல்ல மறுக்கின்றனர். அது தான் உண்மை எனவும் கூறியுள்ளார். கண்ணதாசா? ஜேசுதாசா? என வடிவேலு கூறுவது தான் நமக்கு இவர் பேச்சைக் கேட்டதும் ஞாபகம் வருகிறது.